முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

சாவைத்தரும் தாவர சாடிகள்: கெண்டித்தாவரங்களின் இரையீர்ப்பு யுக்தியில் கரியமிலவாயுவின் பங்களிப்பு கண்டறியப்பட்டுள்ளது

Read time: 1 min
திருவனந்தபுரம்
14 ஏப் 2019
சாவைத்தரும் தாவர சாடிகள்: கெண்டித்தாவரங்களின் இரையீர்ப்பு யுக்தியில் கரியமிலவாயுவின் பங்களிப்பை கண்டறிந்துள்ளது ஆய்வு!

தாவரக்குடும்பங்கள் தங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான விந்தைகளை புதைத்து வைத்திருப்பதை நாம் பலநேரங்களில் உணருவதில்லை. இதற்கு புலாலுண்ணித்தாவரங்கள் ஒரு வியக்கத்தக்க எடுத்துக்காட்டு. இவ்வகைத்தாவரங்கள், பிற உயிரிகளை -  பெரும்பாலும் பூச்சிகளை உண்ணக்கூடியவையாகும். உலகத்திலுள்ள நான்கு லட்ச தாவர வகைகளில், சுமார் ஆயிரம் வகைகள், புலாலுண்ணும் தாவரங்களாக உள்ளன. இவை ஊட்டச்சத்து குறைந்த மண்பரப்புகளில் வாழுவதால் தங்களுக்கு தேவையான சத்துக்களை பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பற்ற சிற்றுயிரிகளிடமிருந்து பெறுகின்றன.  

நெபாந்தஸ் (Nepenthes) எனப்படுவது 160 சிற்றினங்களைக்கொண்ட புலாலுண்ணி தாவரவகைகளில் ஒன்றாகும். தமிழில் நெபாந்தஸ் பேரினம் “கெண்டி” என்று அழைக்கப்படுகிறது. கெண்டி என்பது குழந்தைகள் பால் அல்லது தண்ணீர் அருந்தப் பயன்படுத்தப்பட்ட ஒரு பாத்திரம் ஆகும். இந்த தாவரங்களின் இரை பிடிக்கும் கோப்பைகள் (pitcher) குறிப்பதற்காக இவை கெண்டி தாவரங்கள் என பெயர் பெற்றுள்ளது.  மேலும், இவ்வினத்தை சாடித்தாவரம் (pitcher plant) அல்லது ‘குரங்குக்கோப்பைகள்’ (monkey cups) எனவும் அழைப்பர்.  இந்த இனத்தை சேர்ந்த தாவரங்கள் மடகாஸ்கர், தென்கிழக்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா-நியூகினியா பகுதிகள், பார்னியோ, சுமத்திரா மற்றும் பிலிப்பைன்சு ஆகிய நாடுகளில் இவை காணப்படுகின்றன. இத்தாவரங்கள் நுண்ணிய முனைகளையுடைய வாள் போன்ற இலைகளையும், படர்ந்து வளர ஏதுவாக நூல்போன்ற தளிரிழைகளையும் கொண்டவையாகும். ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை எதிர்கொள்ளும் பரிணாம யுக்தியாக, இவற்றின் தளிரிழைகள் கோப்பை வடிவான ‘இலைக்குழிகள்’ அல்லது ‘சாடிகளாக’ உருவெடுத்துள்ளன.

“புலாலுண்ணித்தாவரங்கள் பூமியில் தனித்துவமான உயிர்வகைகளாகும். அவை பூச்சிகளை மற்றும் சிற்றுயிரிகளை கவரும்படி பரிணாமரீதியாக தங்களை மாற்றியமைத்துக்கொண்டுள்ளன” என்கிறார் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு வெப்ப மண்டலம் தாவரவியில் தோட்டம் மற்றும் ஆய்வு நிறுவனத்தை (Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) சார்ந்த ஆராய்ச்சியாளராரான முனைவர் சாபுல் பேபி அவர்கள்.

கேரள அரசு மற்றும் கேரள மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் (Kerala State Council for Science Technology and Environment) நிதிநல்கையுடன், ஜர்னல் ஆஃப் சைண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Journal Scientific Reports) எனும் ஆய்விதழில் பிரதியான ஆய்வில் இவரும், இவரின் சகாக்களும்; கெண்டித்தாவரங்கள், கரியமிலவாயுடு நிரப்பிய குழிகளை பயன்படுத்தி பூச்சிகளை ஈர்கின்றன என கண்டறிந்துள்ளனர்.

நெபாந்தஸ்ஸின் சாடியானது முதிர்ச்சியடைவதற்கு முன்வரை மூடிஇருந்து, முதிர்ச்சியடந்தப்பின் உள்ளே பகுதியளவு அமிலத்தன்மையுடைய நொதிகளை நிரப்பிக்கொள்ளும். சாடிகளில் ஒப்ர்குலம் (operculum) எனும் பகுதி மூடிப்போல் செயல்பட்டு சாடியின் வளர்ச்சிக்காலத்தில் முழுதாக மூடியும் முதிர்ச்சியடைந்தப்பின் இரையை பிடிக்கும்வகையில் திறந்து காணப்படும். இவை மலர்தேன், வாசனை, நிறம், ஒளிக்கோலங்கள் (fluorescence)  போன்ற குறிப்புக்களைப் பயன்படுத்தி தங்கள் இரைகளை ஈர்க்கும். இந்த அழிவார்ந்த ஈர்ப்புக்குறியீடுகளால் ஏமாறும் பூச்சிகளை சாடியில் சுரக்கும் அமிலநொதிகள் ஜீரனித்து பின்னர் அந்த ஐயுறுவற்ற இரைகளை இத்தாவரங்கள் கபலீகரம் செய்து விழுங்கிவிடுகின்றன. 

இந்த ஆய்வு இத்தாவரங்களின் இரையீர்த்தல் குறிப்புகளில் ஒரு புது பரிமாணத்தை சேர்த்திருக்கின்றது.

“திறக்கப்படாத நெபாந்தஸ் சாடிகளில் அதிக அளவு கரியமிலவாயு (Carbon dioxide) இருப்பதையும் அவை இரைய ஈர்க்கும் வகையில் ஒரு சீரான அளவில் திறக்கப்பட்ட சாடிகளிலிருந்து வெளியேற்றப்படுவதையும் இந்த ஆய்வு கண்டறிந்தது. நெபாந்தாஸ் இனத்தில் இது ஒரு புது வகை இரைப்பிடிக்கும் முறையாகும்” என கூறுகிறார் முனைவர். பேபி.

இந்த ஆய்வாளர்கள் களத்தில் சில தொடக்கநிலை சோதனைகள் மூலம் வாயு நிரம்பிய சாடித்தாவரங்களை கண்டறிந்து, பின்னர் அவற்றில் கரியமிலவாயுவின் பங்கு என்னவென்று கூராய்வு செய்துள்ளனர் “நெபாந்தஸ் கெண்டித்தாவரங்கள் “ஹாலோ லீவ்ஸ்” (Hollow leaves) எனும் உட்குழிவான இலைகள் எனவும் அறிவியல் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் உன்மையில் அவைகள் முழுமையான உட்குழிகளாக இருப்பதில்லை. நெபாந்தஸின் ஒரு சிற்றினமான N. khasianaவின் திறக்கப்படாத  கெண்டிகளை கைகளால் லேசாக அழுத்தினால் அவை வாயு நிரம்பி இருப்பதை உணரலாம். மேலும் அழுத்தினால் அவை வெடித்து, பெரிஸ்டோம் லிட் (peristome lid) எனப்படும் மூடிப்பகுதிகள் திறக்கப்படும். இதுபோன்ற கள கவனிப்புகளின் விளைவாக, திறக்கப்படாத நெபாந்தஸ் கெண்டிகளில் “ஏதோ சில” வாயுகள் இருக்கின்றன என நாங்கள் ஊகித்தோம். இந்த கவனிப்பு எங்களை இந்த வாயுக்களின் கூட்டமைப்பை “வாயு நிரலியல்” (gas chromatography) எனும் ஆய்விற்குட்படுத்த தூண்டியது. இவ்வாய்வு அவற்றில் அதிக அளவில் கரியமிலவாயு இருப்பதையும் உறுதி செய்தது”, என விவரிக்கின்றார் முனைவர் பேபி.

மேலும் இவ்வாய்வாளர்கள் திறக்கப்படாத கெண்டிகளின் கார அமிலத்தன்மை (pH) சுமார் 3.5 ஆக இருப்பதை கவனித்துள்ளனர். இந்த அமிலத்தன்மை இரை பிடிபட்டப்பின்னர் மேலும் அதிகரித்து உள்ளே உள்ள திரவம் மஞ்சள் நிறத்திலிருந்து நிறமற்ற நிலைக்கு மாற்றமடைகிறது. இந்த அதீத அமிலத்தன்மையானது அதில் கரைந்திருந்த கரியமிலவாயுவாலேயே என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. சரி, எங்கிருந்து இந்த கரியமிலவாயு கெண்டிக்குள் வந்தது? நுண்ணோக்கிக்கள் மூலம் தளிரிழைகளையும் வேர்களையும் கண்டபோது, அவற்றுள் பல உட்குழி கால்வாய் போன்ற அமைப்புகளும் (hollow channels) குழாய் கட்டுக்களும் (vascular bundles) இருப்பதை கண்டு படம்பிடித்துள்ளனர். ஆனால் இந்த குழாய்கள் மூலம் நிலத்திலிருந்து கரியமிலவாயு வேர்கள் வழியாக கெண்டிகளுக்கு வர வாய்பில்லை எனவும் கெண்டிகளிலுள்ள அதீத கரியமிலவாயு அவற்றிலுள்ள தனித்துவமான சில திசுக்களின் கூடுதல் ஆவியுயிர்ப்பின் விளைவாகவே அங்கே நிரம்பியது எனவும் இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

கரியமிலவாயு மேலும் எவ்வாறு இரையை பிடிக்க உதவுகிறது என்பதை அவர்கள் விவரிக்கின்றனர்.

“கரியமிலவாயு ஒரு அறியப்பட்ட பூச்சி ஈர்ப்பி. பல வகை பூச்சிகள் தாவரங்களிலிருந்து வெளியேறும் கரியமிலவாயுவின் சிறு மாறுதல்கள் மற்றும் மாறல் விகிதத்தைக்கூட கூர்ந்து கவனிக்கக்கூடியவை. பூச்சிகள் கரியமிலவாயுவை கண்டறியவும் கணிக்கவும் ஏதுவாக அவற்றுள் பல வளர்ச்சியடைந்த ஏற்பிகளை கொண்டுள்ளன. இது அவைகளின் இரைகளை கண்டறிய உதவும் ஒரு காரணியாகும். எங்கள் ஆய்வில் N. khasiana கரியமிலவாயுடை சீறாக வெளியேற்றுவதையும், அது பின்னர் ஒரு புலன்சார்ந்த குறிப்பாக அமைந்தது இரையை ஈர்பதையும் கண்டறிந்துள்ளோம்” என்கிறார் முனைவர் பேபி.

இந்த ஆய்வு நெபாந்தஸ் மற்றும் பிற புலாலுன்ணித் தாவரங்களில் அறியப்படாத சில சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளித்திருப்பதோடு மேலும் ஆராய பல பாதைகளை அமைத்துமுள்ளது.

“நாங்கள் தற்போது  N.khasianaவில் உள்ள  தாவர வேதிப்பொருட்களை கண்டறிவது மற்றும் இத்தாவரங்களின் இதர இரைப்பிடிக்கும் முறைகளை ஆராய்வது போன்றவற்றில் ஆர்வமாக உள்ளோம்” என எதிர்காலத் திட்டங்களைப்பற்றி விவரித்தார் முனைவர் பேபி.