முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

கடந்த 2019 பிப்ரவரி மாதம், மேற்கு வங்கத்தின் ஜார்கிராம் மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த எட்டு நபர்களை ஓநாய் ஒன்று தாக்கியதால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதைப் போல், பக்கத்து கிராமத்தில் குளிர்காய்ந்துக் கொண்டிருந்த மூன்று நபர்களை ஒரு ஓநாய் தாக்கியதையும், அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதையும் உள்ளூர் நாளிதழ் ஒன்று ஆவணப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிகரித்துவரும் இதுபோன்ற ஓநாய் தாக்குதல் சம்பவங்கள், வயல்களில் வேலை செய்யும் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியன.

Read time: 1 min

ஈரல் அழற்சி (Hepatitis) சி என்பது ஒருவகை தொற்றுநோய். இது ஹெப்பாடிட்டீஸ் சி  எனும் ஈரல் அழற்சி நச்சுநுண்மத்தினால் (virus) உண்டாக்கப்படுகின்றது. இந்த நச்சுநுண்மம் ரத்தத்தின் மூலமாக பரவுகின்றது. நரம்பு மருந்திற்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் ரத்த தானத்தின் போது பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றினால் இந்த நச்சுநுண்மம் பரவக்கூடும். இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல்  தெரியலாம். ஆனால், இந்நோய் நீண்ட கால விளைவுகளை ஒருங்கே கல்லீரல் செயலிழப்பு மூலமாக வெளிப்படுத்தும்.

Read time: 1 min

தற்போது பரவலாக இருக்கும் அலோபதி எனும் நவீன மருத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திருந்து தான் பரவலாகி வந்தது. இதற்கு முன்னர், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளே வழக்கத்தில் இருந்தன.  தனியாக பிரிக்கப்பட்ட  வேதியல் மூலக்கூறுகளைக் கொண்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ப சிகச்சைகள் செய்வதே அலோபதி மருத்துவ முறை. அலோபதி மருத்துவத்தில் பொதுவாக சொல்லப்படும் குறைபாடுகளில் ஒன்று அதன் பக்கவிளைவுகள். இதனால் இன்று உலகெங்கிலும் உள்ள பல ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றைய வழக்கில் கொண்டு வருவத்திற்கான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read time: 1 min

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”
-54:1 குற்றாலக்குறவஞ்சி
(குறத்தி மலைவளங்கூறுதல்)

என குற்றால மலையின் அழகை விவரிக்கும் போது ஆண் குரங்குகள் (வானரம்) பெண் குரங்குகளிடம் (மந்தி) கனிகளைக்கொடுத்து  சைகைகள் மூலம் கொஞ்சி விளையாடும் அழகிய காட்சியினை “குற்றாலக் குறவஞ்சியில்” 18ஆம் நூற்றாண்டிலேயே ஆவணப்படுத்தியுள்ளார்  திரிக்கூடராசப்பக்கவிராயர். 

Read time: 1 min

“முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி…….”,

169 - நற்றிணை

Read time: 1 min

மீநுண் தொழில்நுட்பம் எனப்படும் “நானோ தொழில்நுட்பம்” இன்று அறிவியலில் மிகப்பெரும் மாற்றத்தினை உண்டாக்கி வருகின்றது. மூலக்கூறு அளவிலும் கூட பருப்பொருட்களை கையாளும் தொழில்நுட்பமே மீநுண் தொழில்நுட்பம். மீநுண் துகள்கள் கரிமம் சார்ந்த மற்றும் சாராதவை என இரு வகைகளில் உள்ளன, இவைகள் மிக நுண்ணிய அளவினைக் கொண்டதாகும். இப்படிப்பட்ட மீநுண் பொருட்களை, அகச்சிவப்பு ஒளியின் (Infrared light) உதவியுடன் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வகை மீநுண் தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் சிகிச்சையில்  புதிய நம்பிக்கையினை விதைத்துள்ளது.

Read time: 1 min

பல்லுயிர் ஓம்புதலிலும் இயற்கையினை கூர்நோக்கி உணருவதிலும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளாகவே சிறந்து விளங்கியிருந்துள்ளனர் என்பதற்கு பல சங்க இலக்கியங்கள் சான்றாக நிற்கின்றன. நிலப்பரப்புகளை ஐந்து வகைகளாக பிரித்த நம் இலக்கியங்கள் அவற்றின் உட்பிரிவுகளையும் அவ்வப்போது உற்று நோக்கியிருந்துள்ளன.

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது” - (அதிகாரம்:வான் சிறப்பு, குறள் எண்:16)

Read time: 1 min

நம் பள்ளிகளில் மாணவர்களுக்கு பெரும் சவாலாகவுள்ள காரணிகள் எவை தெரியுமா? நீண்ட நேர வகுப்புகளும், மாணர்வர்களின்  கிரகிக்கும் திறனும், கூடவே அவர்களின் பார்வைக்கூர்மையும் ஆகும். ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை பள்ளிகளில் செலவழிக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் வகுப்பறைகள் கல்வி கற்க போதுமான சூழலை உருவாக்குகிறதா?

Read time: 1 min

தன் நீலநிறப்பூக்களால் மலையினை நீலப்போர்வையால் போர்த்தி, நீலகிரி மலை எனப்பெயர் பெற வைத்த அதிசய தாவரம் நீலக்குறிஞ்சி. ஸ்ட்ரோபிலன்தஸ் குந்தியானஸ் (Strobilanthes kunthianus) என்ற அறிவியல்  பெயரால் அறியப்படும் இவ்வகை குறிஞ்சி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே மலரும் தன்மையுடையதாகும், ஸ்ட்ரோபிலன்தஸ் என்ற இத்தாவரபேரினத்தில் சுமார் 350 வகை சிற்றினங்கள் உள்ளடங்கியுள்ளது. சென்ற வருடம் மேற்குத்தொடர்ச்சிமலைகளில் மலர்ந்து அனைவரையும் கவர்ந்த குறிஞ்சி மலர்கள், தமிழகம் மற்றும் கேரள  ஆராய்ச்சியாளர்கள் புது வகைகளை கண்டுபிடிக்க உறுதுணையானது.

Read time: 1 min

“சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று.....”
– 53 - நந்திகலம்பகம் - சீவகசிந்தாமணி

அரும்பிவரும் நெல் பயிர்களானது பார்பதற்கு பச்சைப்பாம்பின் உடலை ஒத்திருக்கும் என்னும் உவமையுடன் துவங்குகிறது திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி பாடலொன்று. பச்சைப்பாம்புகளின் உருவவியலை உற்றுநோக்கி பல நூற்றாண்டுகளுக்கு முன் இலக்கியங்களில் பதிவிட்டதன் மூலம் நம்மைச்சுற்றியுள்ள நிலப்பரப்புகளில் அன்றே பச்சைப்பாம்புகள் உலவியிருந்ததை ஆவணப்படுத்தியுள்ளனர் நம் தமிழ் மறவர்கள்.

Read time: 1 min