முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது. ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.
Science
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளில் பிற இடங்களைப்போல் விலங்குகள்-கடக்கும் பாதைகள் உள்ளன. ஆனால், அங்கே அந்தப் பாதைகளைக் கடப்பது எச்சரிக்கை பலகைகளை வாசித்துவிட்டு சாதாரணமாக கடந்துசெல்லக்கூடிய எளிதான காரியம் இல்லை. மாறாக, போக்குவரத்து சீரமைப்பு, பொது அறிவுப்புகள், நிரந்தர பாலங்கள் என பல ஏற்பாடுகள் தேவை! இது அங்கே கூட்டமாகச் சாலைகளைக் கடந்து செல்லக்கூடிய நண்டுகளை வழியனுப்ப மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள். இந்தக் கண்கவர் நிகழ்வு வருடந்தோறும் நிகழும் ஓர் இயற்கையின் விந்தையாகும்.
IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்
பறவைகளின் கூட்டிசையோடு துவங்கும் ஒரு நாளைவிட ஒரு அழகான நாள் இருந்துவிட முடியுமா? பல்வேறு சுருதி மற்றும் இசை நுணுக்கங்களுடன் இப்பறக்கும் பாடகர்கள், கவனிப்பவர்களின் காதுகளுக்குத் தினந்தோறும் ஓர் இசை விருந்து வைக்கின்றனர் என்றால் அது மிகையாகாது. தங்களின் பெயர்களுக்கேற்ப பாடல் பறவைகள் விரிவான பாடல்களைப் பாடும் திறன் கொண்டவை. சிட்டுக்குருவிகள், ராபின்கள், கதிர்க்குருவிகள், காகங்கள் போன்ற 5000க்கும் மேற்பட்ட சிற்றிங்களைக்கொண்ட பாடல் பறவைகள் சராசரியாக ‘அழைப்பு’ மற்றும் ‘பாடல்’ என்னும் இரண்டு வகை சத்தங்களை எழுப்பக்கூடியவை. அழைப்புகள் எளிமையான குறுகிய சத்தங்களாகும்.
கண்கவர் வண்ணங்கள், வியத்தகு வடிவங்கள், திடமான நறுமணம் என பல இயல்புகள் மூலம் மலர்கள் தங்களின் மகரந்தச்சேர்க்கையாளர்களை ஈர்க்கின்றன. சொல்லப்போனால், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் இதர மகரந்தச்சேர்க்கை செய்யும் பூச்சிகள் தங்களுக்கென ஒரு விருப்பப்பட்டியலை வைத்து மலர்களைத் தேர்ந்தெடுத்துச் செல்லும் திறன் கொண்டவை என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இந்த மலர்த்தேர்வு விருப்பங்கள் சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப மாற்றிக்கொள்ளக்கூடியவை என்பது கூடுதல் தகவல்.
ஆய்வாளர்கள் யானைகளின் வாலின் மயிரிழைகளில் உள்ள இயக்குநீரினைக் கொண்டு அவற்றின் மனஅழுத்த நிலையைக் கண்டறிந்துள்ளனர்.
நீர்விலக்கி அடுக்கு பூசுவதன் மூலம் நெகிழி முகக்கவசங்களின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்துகின்றனர்.
மின் வாகனங்கள் வன ஊர்தி போது விலங்குகளுக்குள் ஊடுருவது குறைந்துள்ளன என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது
மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை உயிர்ப்பிக்க அவசரக் கொள்கை மாற்றத்துக்கான அழைப்பு
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய் (IIT B) ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் மண்டலத்தின் தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்க்க அழைக்கின்றனர்
உலகளாவிய உணவு பாதுகாப்பை உறுதி செய்ய சிறுதானியங்கள் உதவும்